நுவரெலியா பிரதான வீதியில் விபத்து – ஐவர் காயம்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் லபுக்கலை வெஸ்டவோட் பகுதியில் இன்று காலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது .

வாகன சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறத்த விபத்தில் சாரதி உட்பட 5 பேர் காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொழும்பு மஹரகம பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதோடு மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *