உள்ளூராட்சி சபை தேர்தல் முறை குளறுபடிகளை மறைக்கவே புதிய குழு நியமனம்- ரவூப் ஹக்கீம் விசனம்!

உள்ளூராட்சி சபை தேர்தல் முறையில் இருக்கிற குளறுபடிகள் காரணமாக இதற்கென்று மீண்டும் ஒருமுறை எல்லை நிர்ணயம் செய்வதற்கான குழு ஒன்றை நியமித்திருக்கிறார்கள் என‌ முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கொழும்பிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து  தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

எங்களை பொறுத்தமட்டில் உள்ளூராட்சி சபை தேர்தல் சம்பந்தமான சீர்திருத்தங்கள் செய்யப்பட்ட போது குறிப்பாக எல்லா ஊராட்சி சபைகளிலும் எல்லா இனங்களுக்கும் இன குழுமங்களுக்கும், அதே நேரம் சிறிய கட்சிகளுக்கும் இருக்கிற வாய்ப்புகளையும் உள்வாங்கி தான் அந்த சீர்திருத்தம் செய்யப்பட்டது.

இதன் பிரகாரம் தொகை அதிகரித்துவிட்டது என்ற காரணத்தை காட்டி அந்த உறுப்பினர் தொகையை குறைப்பதற்காக என்ற அடிப்படையில் செய்யப்படுகின்ற இந்த முயற்சி நிச்சயமாக மீண்டும் ஒருமுறை இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கும் சிறிய கட்சிகளுக்கும் உள்ளூராட்சி சபைகளில் இருக்கின்ற உரிமையை  பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை வெகுவாக குறைக்கின்ற ஒரு முயற்சியாக தான் இது இறுதியில் போய் முடியும் என்பது எங்களுடைய தாழ்மையான கருத்து. 

 இதன் அடிப்படையிலே இவ்வாறான திருத்தங்களை கைவிட்டு தேவையற்ற உறுப்புகளை குறைக்க வேண்டுமாக இருந்தால் முன்பு வழக்கில் இருந்த விகிதாசார தேர்தல் முறையின் அடிப்படையிலான வட்டார முறை இல்லாத ஒரு தேர்தல் முறை அறிமுகப்படுத்தினால் மாத்திரம் தான் உறுப்பினர்களை குறைப்பதன் மூலம் சிறிய கட்சிகளுக்கும் சிறுபான்மை இனங்களுக்கும் நியாயத்தை ஏற்படுத்த முடியும் என்கிற நிலைப்பாடு இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக சொல்லி வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *