இலங்கை குடியேற்றவாசிகளின் புகலிட கோரிக்கை நிராகரிப்பு! பிரான்சில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கையர்கள்!

ஐந்து இலங்கை குடியேற்றவாசிகள் பிரான்சிற்குள் பிரவேசிப்பதற்கான கோரிக்கையை அந்நாட்டு நிர்வாக நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அவர்களின் கோரிக்கையை நீதிமன்றம் கடந்த 31ஆம் தேதி நிராகரித்தது.

இலங்கையர்கள் நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் காத்திருப்புப் பகுதியில் வைக்கப்படுவார்கள் எனவும், 8 புலம்பெயர்ந்தோர் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை பிரான்ஸுக்குள் நுழைய 5 இலங்கைக் குடியேற்றவாசிகளின் கோரிக்கையை நிர்வாக நீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில், குறித்த அனைவரும் மிக விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, ​​நாடு திரும்பினால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மேலும் 8 புலம்பெயர்ந்தோர் தங்கள் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

இன்னும் சில தினங்களில் நீதிமன்றத்தின் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

கடந்த வார இறுதியில் ஒரு குழந்தை உட்பட 4 புலம்பெயர்ந்தோர் தேசிய பிரதேசத்தில் தங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் ஒக்டோபர் 20ஆம் திகதி இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி படகில் ரீயூனியன் தீவுக்கு வந்த 17 புலம்பெயர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் அனைவரும் ரோலண்ட் கரோஸ் விமான நிலையத்தில் காத்திருக்கும் இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *