ICC இந்தியாவை சாதகமாக நடத்துவதாக நான் நினைக்கவில்லை – ரொஜர் பின்னி

சர்வதேச கிரிக்கெட் பேரவையால் தாங்கள் சாதகமாக நடத்தப்படுவதாக தாம் நினைக்கவில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் ரொஜர் பின்னி தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில், விராட் கோலி போலியான களத்தடுப்பில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மழையால் போட்டி இடைநிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நேர இடைவெளி தொடர்பாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்டபோது, இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அனைவரும், ஒரே மாதிரியாகவே நடத்தப்படுகின்றனர்.

எனவே, எந்த வகையிலும் அவ்வாறு சொல்ல முடியாது.

கிரிக்கெட்டில் இந்தியா ஒரு மிகப்பெரிய சக்தியாகும்.

ஆனால், அனைவரும் ஒரே மாதிரியாகவே நடத்தப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் ரொஜர் பின்னி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *