நுவரெலியாவில் வீதியில் பயணித்த கார் விபத்து : அதில் பயணித்தவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

கண்டி, நுவரெலியா பிரதான வீதியில்  லபுக்கலை வெஸ்டவோட்  கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று (05) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கார் சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த டிரைவர் உட்பட 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

அவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு மஹரகம பகுதியில் இருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற கார் விபத்துக்குள்ளானது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *