
கடந்த 2 ஆம் திகதி கொழும்பில் எதிர்க்கட்சி ஒழுங்கு செய்த போராட்டம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. போராட்டக்காரர்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படலாம் என்ற ஆபத்து தொடர்ந்து உள்ளது. போராட்ட சக்திகள் ஓடி ஒழியும் நிலைமை தான் உள்ளது என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்தார்.
‘சமூகம் மீடியா’வுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2 ஆம் திகதி கொழும்பில் எதிர்க்கட்சி ஒழுங்கு செய்த போராட்டம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அரசாங்கம் அதற்கான முடிவு தடுப்பு ஏற்பாடுகளுடன் காணப்பட்டது.
எதிர்க்கட்சிக்குள்ளும் ஐக்கியம் இருக்கவில்லை. எனவே அரசாங்கத்தின் தடைகள் அந்த போராட்டத்தினை கணிசமானளவுக்கு முடக்கி விட்டது தான் உண்மை.
ரணில் விக்கரமசிங்க ஆட்சிக்கு வந்ததன் பின்னர் படித்த நடுத்தர வர்க்கம் இந்த போராட்டங்களுக்கு ஆதரவு கொடுப்பதற்கு பின் வாங்க தொடங்கி விட்டது. உதாரணமாக வழக்கறிஞர் சங்கம், வர்த்தக ஒன்றியங்கள் பெருமளவிற்கு ஆதரிக்கவில்லை.
ரணில் விக்கிரமசிங்க படித்த நடுத்தர வர்க்கத்தினரின் நண்பன். எனவே அவர் வந்ததும் உற்சாகம் அடைந்து விட்டது. இந்த பின்னணியில் போராட்டத்துக்கான ஆதரவு குறைந்து விட்டது.
அரசாங்கம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை வைத்து போராட்டக்காரர்களை ஒதுக்குகிறது. இதில் ரணில் முன்னேறி வருகிறார் என்பது தான் உண்மை.
முன்னைய காலங்களில் மேற்கத்தேய தூதரகங்கள் ஆதரவு அளிக்கவில்லை. அரகலியவின் வின் எழுச்சியின் பின்னர் காணப்பட்ட அந்த ஆதரவுத் தளம் பலவீனம் அடைந்து விட்டது. நடுத்தர வர்க்கம் மேற்கத்தேய தூதரகங்கள் என்பனவற்றின் ஆதரவுடன் அரகலிய எழுச்சி பெற்றது. ஆனால் இந்த நிலைமை தற்போது இல்லை.
ரணில் பொருளாதார பிரச்னையை ஒப்பீட்டளவில் தணித்து இருக்கிறார். எரிபொருள், எரிவாயு விநியோகம் சீருக்கு வந்துள்ளது. இதனால் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஓய்வான மனோ நிலை வந்து விடும். பொருட்களின் விலை இறங்கவில்லை. விலைகளை இறக்கவும் மாட்டார்கள்.
வர்த்தகர்கள் வெவ்வேறு காரணங்கள் சொல்வார்கள். முச்சக்கரவண்டியின் கட்டணமே இன்னும் இறங்கவில்லை. 3 மடங்காக உயர்ந்துள்ளது. விலை உயர்வு இன்னும் மக்களை முழுமையாக வந்தடையவில்லை. பொருளாதார நெருக்கடி இன்னும் இருக்கு.
பொருளாதார நெருக்கடியினால் வந்த போராட்டங்களை ஒடுக்குவதில் அரசியல்வாதிகள் பெருமளவிற்கு வெற்றியடைகிறார்கள் என்பதே உண்மை.
அத்துடன் ராஜபக்ஷக்களை வீட்டுக்கு அனுப்புவதற்காகவும் இடம்பெற்றது. ஆனால் இவர்கள் ரணிலை முன் நிறுத்தி போராட்டங்களை ஒடுக்கி விட்டார்கள். ரணிலின் மறைவில் பழைய நபர்கள் நிற்கிறார்கள். அரகலியவர்கள் கேட்ட எந்த மாற்றமும் நடக்கவில்லை.
போராட்டக்காரர்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படலாம் என்ற ஆபத்து தொடர்ந்து உள்ளது. போராட்ட சக்திகள் ஓடி ஒழிக்கும் நிலைமை தான் உள்ளது. போராட்டங்கள் பெருளமளவிலான வெற்றியை பெறவில்லை.
SLB, ULB இரண்டும் போராட்டங்களுக்கு மத்தியில் ஐக்கியத்திற்கு போகவில்லை. இவர்கள் தேர்தலின் எதிரிகள். தங்களுடைய வீடுகளை எரித்து, தங்களுடைய இருப்புக்களை கேள்விக்கு உள்ளாக்கிய, தங்களை ஓடி ஒழிய வைத்த போராட்டகாரர்கள் அரகலியவுக்கு எதிராக இந்த இரண்டு பாரம்பரிய கட்சிகளும் கூட்டு சேர்ந்தன. தங்களை தற்காத்து கொண்டன என்பதிலிருந்து தமிழில் காணப்படும் தேர்தல் கட்சிகள் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.- என்றார்.
பிற செய்திகள்