பொலிஸாரின் அநாகரீக செயற்பாடு: ஹிருணிகா முறைப்பாடு

கொழும்பு,நவ 05

ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் பிரிவு தலைவி ஹிருணிக்கா பிரேமசந்திர உள்ளிட்ட 3 பெண்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த 2 ஆம் திகதி மருதானை எல்பிஸ்டன் திரையரங்க அருகே இருந்து அரசாங்கத்தின் அடக்குமுறை செயற்பாட்டை உடனடியாக நிறுத்தக் கோரியும் , பயங்கரவாத தடை சட்டத்தை இரத்துச்  செய்ய வலியுறுத்தியும் போராட்ட பேரணி நடாத்தப்பட்டது.

இதன்போது  பொலிஸார் உடல் ரீதியிலான  இடையூறுகளை விளைவித்ததாக ஹிருணிகா உள்ளிட்டோர் , பொலிசாரின் சீருடை இலக்கங்கள், வீடியோக்களை இணைத்து இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *