கொழும்பு,நவ 06
நாட்டில் எதிர்வரும் 15 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என கூட்டுதாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எதிர்வரும் சில நாட்களில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்களும் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உரிய முறையில் எரிபொருள் கொள்வனவு செய்யப்படாமை காரணமாகவே, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.