பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை மறுப்பு

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு, பிணை வழங்க அவுஸ்ரேலிய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க, அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தார்.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்தமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுக்களின் கீழ், யுவதியொருவரினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்க, சிட்னி சிட்டி பொலிஸாரினால் பெரமேட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்த நீதவான், தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவுஸ்ரேலியாவில் நடைபெற்று வரும் இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டிக்காக இலங்கை அணியுடன் தனுஷ்க குணதிலக்க பயணித்தபோது காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார்.

எவ்வாறாயினும், அஷேன் பண்டார உத்தியோகபூர்வமாக அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட போதிலும் தனுஷ்க குணதிலக்க தொடர்ந்தும் அணியுடன் இணைந்தே இருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *