<!–
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை காரணமாக விவசாய நிலங்கள் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளதனால் வெள்ள நிலைமையினை கட்டுப்படுத்தும் வகையில் முகத்துவாரத்தின் ஊடாக வெள்ள நீரை கடலுக்குள் வெளியேற்றும் செயற்பாடுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இப்பகுதியில் உள்ள மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும் இப்பகுதியில் உள்ள வாவிக்கரையை அண்டிய பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதன் காரணமாக இதனை வெட்ட வேண்டிய அவசியம் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் வெள்ள நீரை வெளியேற்றினால்தான் விவசாயிகளை காப்பாற்ற முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.