கொத்மலை, நவ 06
வெதமுல்ல பகுதியில் சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அந்த பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றை கடக்க முயன்றபோது, குறித்த சிறுமி நீரில் அடித்து செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பின்னர் பிரதேசவாசிகள் சிறுமியை கண்டுபிடித்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் உயிரிழந்துள்ளார்.
வெதமுல்ல – கெமில்டன் பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமி தனது சகோதரியுடன் கால்வாயை கடக்க முற்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.