பேருந்திலிருந்து தவறி வீழ்ந்து ஒருவர் சாவு!

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பேருந்தில் பயணித்த ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் பளை இத்தாவில் ஏ–9 வீதியில் இன்று (6) இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு சுற்றுலாவுக்கு சென்று திரும்புகையிலேயே இத்தாவில் ஏ–9 வீதியில் இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேருந்திலிருந்து தவறிவீழ்ந்த நிலையில் குறித்த நபர் பளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் யாழ்.போதனா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் மீசாலை பகுதியைச் சேர்ந்த குகதாசன் விமல்ராஜ் (வயது–47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *