மும்பை, நவ 06
இந்திய அணி ஜிம்பாப்வேயை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நிலையில், அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்வது உறுதியாகியுள்ளது.
மெல்போர்ன், 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றன.
இதில் குரூப் 1ல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2ல் இருந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்நிலையில், லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதின. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்வது உறுதியாகியுள்ளது.
இந்தநிலையில், ரோகித் சர்மாவை சந்திக்க மைதானத்திற்கு ஓடிவந்த ரசிகர் ஒருவர், ரோகித்தின் அருகில் வந்தபோது கண்ணீர் விட்டு அழுதார். மைதானத்தில் அத்துமீறி நுழைந்தற்காக ரசிகருக்கு 6.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.