வழக்கு பதிவு செய்ய தயக்கம் காட்டும் போலீசார் – இம்ரான்கான் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த 3-ந் தேதி பஞ்சாப் மாகாணம் வாஜிராபாத் நகரில் அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் பங்கேற்றிருந்தபோது, துப்பாக்கியால் சுடப்பட்டார்.

இதில் வலது காலில் குண்டு பாய்ந்து, காயமடைந்த அவருக்கு லாகூரில் உள்ள ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அவர் அங்கு சிகிச்சையில் உள்ளார்.

இந்த நிலையில் இம்ரான்கான் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்தவாறு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

என்மீதான கொலை முயற்சிக்கு பிரதமர் ஷபாஸ் ஷெரீப், உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா மற்றும் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் ஜெனரல் பைசல் ஆகியோரே காரணம். எனவே அவர்களது பெயரை புகாரில் குறிப்பிட எனக்கு முழுமை உரிமை உள்ளது.

ஆனால் ராணுவ அதிகாரியின் பெயர் இருப்பதால் எனது புகாரை ஏற்று வழக்கு பதிவு செய்ய பஞ்சாப் மாகாண போலீசார் தயக்கம் காட்டி வருகின்றனர். பிரதமர் மற்றும் உள்துறை மந்திரிக்கு எதிராக கூட அவர்கள் வழக்கு பதிவு செய்ய தயாராக இருக்கிறார்கள்.

ஆனால் புகாரில் ராணுவ அதிகாரியின் பெயரை நீக்கும் வரை வழக்கு பதிவு செய்ய முடியாது என கூறுகின்றனர். எனவே பாரபட்சமற்ற மற்றும் நியாயமான விசாரணையை நடத்த புகாரில் குறிப்பிட்டுள்ள 3 பேரும் உடனடியாக பதவி விலக வேண்டும். இவ்வாறு இம்ரான்கான் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *