யாழ் ஆரியகுளம் நாகவிகாரையில் இன ஐக்கியத்திற்கான விஷேட தானம் வழங்கும் பிரித்பாராயண நேற்று இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் யாழ் இந்திய துணைத்தூதுவர் ராக்கேஷ் நட்ராஜ்,வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேனா,யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர,யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் உட்பட பலரும் கலந்துகொண்டு தானத்தினை வழங்கிவைத்தனர்.
இந் நிகழ்வில் மீகஹஜந்துர சிறிவிமல தேரர், படைப் பிரிவுகளின் உயர்அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள் சர்வமதத்தலைவர்கள், பெளத்ததுறவிகள்,நலன்விரும்பிகள் பலரும் கலந்து கொண்டனர்.
[embedded content]