எரிபொருள் விலை சூத்திரம் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் இரவோடு இரவாக எரிபொருள் விலை அதிகரிப்பு அறிவிக்கப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக பெற்றோலிய சங்கம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட திகதிகளில் விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அமைச்சரிடம் தெரிவித்ததையடுத்து, அவர் இதனைச் செய்வதற்கு ஒப்புக்கொண்டதாக சங்கத்தின் இணைச் செயலாளர் திரு.கபில நாவுதுன்ன தெரிவித்தார்.
குறித்த நாளில் எரிபொருள் விலை சூத்திரத்தை அமுல்படுத்த செல்லும் போது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வராததால் எரிபொருள் விநியோகஸ்தர்கள் அசௌகரியம் அடைவதுடன் நுகர்வோர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
எரிபொருளின் விலையைக் குறைப்பதற்கும் அதிகரிப்பதற்கும் அரசாங்கம் இரண்டு நாட்களைக் குறிப்பிட்டு, நள்ளிரவில் விலையை அதிகரிக்க ஒப்புக்கொண்டபோது, அதற்கு ஏற்ப அவர்கள் செயல்படவில்லை, ஒரு நாள் இரவு 10 மணிக்கும் மற்றொரு நாள் 03 மணிக்கும் விலையை அதிகரித்தனர்.இதனால் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டது என்றார்.