திருமணத்துக்கு மறுத்ததால் மனமுடைந்த இளைஞன் தீக்குளித்து தனது காதலியை கட்டிப்பிடிக்க முயற்சித்து அந்த உயிர்மாய்ப்பு முயற்சி தோல்வியடைந்ததில், வெள்ளவத்தை பகுதியில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.
மஸ்கெலியா ரதர்போர்ட் தோட்டத்தை சேர்ந்த 28 வயதுடைய ருஹுனு குமாரி என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
இவர் மொரட்டுவ பிரதேசத்தில் தொழில் செய்து வந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கட்டுபெத்த சந்தியில் உள்ள காதலியின் வேலைத்தளத்துக்கு சென்ற குறித்த நபர்,காதலி எங்கே என கடையின் உரிமையாளரிடம் கேட்டுவிட்டு கழிவறைக்குச் சென்றார்.
பின்னர் நெருப்புடன் வெளியே வந்து தனது காதலியை கட்டிப்பிடித்தார். அப்போது, குறித்த பெண் தீப்பிடித்து எரிவதைக் கண்டவர்கள் பெண்ணைக் காப்பாறியுள்ளனர்.
பின்னர் காதலன் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் மறுநாள் வெள்ளவத்தை பிரதேசத்தில் ரயிலில் மோதுண்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தீக்காயங்களுக்கு உள்ளான யுவதி களுபோவில வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவரும் மஸ்கெலியாவை சேர்ந்த 23 வயதுடைய பெண் என தெரிவிக்கப்படுகிறது.