கொழும்பில் பிரபல உணவகத்தின் உணவு பொதியில் புழு!

நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அதிகார சபை,அதன் அதிகாரிகளுக்கு கொழும்பில் நடத்திய கருத்தரங்கொன்றுக்கு இலங்கையின் பிரதான உணவகத்திடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மதிய உணவில் புழு மற்றும் பிளாஸ்டிக் துண்டுகள் காணப்பட்ட சம்பவம் தொடர்பாக கொழும்பு மாநகர சபை வழக்கு தொடர நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்ல தெரிவித்துள்ளார்.கொழும்பு யூனியன் பிளேஸ் பிரதேசத்தில் உள்ள உணவகத்தில் இந்த மதிய உணவு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றில் சில உணவு பொதிகளில் பொலிதீன் துண்டுகள் காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *