ஆசீர்வாத பூஜைக்காக மந்திரவாதிக்கு 80 மில்லியன் வழங்கிய திலினி, ஜானகி!

திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலி மற்றும் கிறிஸ் குழுமத்தின் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோர் 80 மில்லியன் ரூபாவை தமக்கான ஆசீர்வாத பூஜைக்காக, மந்திரவாதி ஒருவருக்கு வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு மேலதிக நீதிவான் ஷிலானி பெரேரா முன்னிலையில் அறிக்கையாச் சமர்ப்பித்துள்ளது.

மேலும், முறைப்பாடு செய்தவர்களிடமிருந்து திலினி பிரியமாலி பெற்ற பணம், கிறிஸ் குழும அலுவலகத்தில் வைத்து ஜானகி சிறிவர்தனவுக்கு வழங்கப்பட்டமை குறித்த உண்மைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *