சிலாபம் எரிபொருள் நிலைய பம்பியை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்

சிலாபம் மீன்பித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தில் புதிதாக அமைக்கப்பட எரிபொருள் நிலைய பம்பியை நாடா வெட்டி ஆரம்பித்து வைத்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முதன் முதலாக மண்ணெண்ணை விநியோகத்தை ஆரம்பித்து வைத்தார்.

சிலபாம் கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன.

குறிப்பாக சிலாபம் மீன்பிடித் துறைமுகத்தினுள் ஒதுக்கப்படும் மணலை அகற்றுவதற்கான வேலைத் திட்டம், உட்பட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *