தனுஷ்க குணதிலக அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் இடை நிறுத்தம்!

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் இடை நிறுத்தம்!

இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவை அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநிறுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் இவ்வாறு அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அவரை எந்தத் தேர்வுக்கும் கருத்தில் கொள்ளப்போவதில்லை என இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.
கிரிக்கெட் போட்டிக்காக ஆவுஸ்திரேலியா சென்று அங்கு தங்கியிருந்த இவர் மீது பெண்னொருவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இன்றைய தினம் இவருக்கான பிணை மனுவும் நிராகரிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *