
கடந்த மே மாதம் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் உடைக்கப்பட்ட தங்காலையில் உள்ள டி.ஏ.ராஜபக்ஷவின் சிலை மீட்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் தந்தை டி.ஏ.ராஜபக்ச.
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி கொழும்பில் மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் டி.ஏ.ராஜபக்ஷவின் சிலை உடைக்கப்பட்டது.
எவ்வாறாயினும், டி.ஏ.ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (06) தங்காலையில் சிலை புனரமைக்கப்பட்டு அதன் அசல் இடத்தில் மீண்டும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.