
கிளிநொச்சி நாச்சிக்குடா முஸ்லிம் அமைப்பினரினால் எமது உரிமை மீட்புப் போராட்டம் என்ற தொனிப்பொருளில் நடைபவணி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த போராட்டம் கடந்த மாதம் 26ம் திகதி கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியிலிருந்து நடைப்பவணியில் 12 வது நாளாக நேற்று புத்தளத்தை வந்தடைந்துள்ளனர்.
32 வருடங்களாகியும் தமக்கான மீள்குடியேற்றம் துரிதகெதியில் இடம்பெறவில்லையெனவும் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களுக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படுவதில்லையெனவும் இந்த நிலையில் ஜனாதிபதி ஆனைக்குழு ஒன்று நியமிக்கவேடுமென்று கோரிக்கையை முன்வைத்து குறித்த நடைப்பவணி போராட்டம் இஹ்ஸான் மொஹிதீன் மற்றும் ஹஸன்குத்தூஸ் மொஹமட் ஹாமிஸ்னால் கடந்த மாதம் 26ம் திகதி கிளிநொச்சி நாச்சிக்குடாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளனர்.
நேற்றுடன் 12 நாளாவதாக புத்தளம் நகரத்தை வந்தடைந்தனர். குறித்த நடைப்பவணி போராட்டம் கொழும்புவரை சென்று ஜனாதிபதியைச் சந்தித்து மஹஜர் ஒன்றையும் கையளிக்க உள்ளதாக இதன்போது தெரிவித்தனர்.
இதன்போது ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துக்களை தெரிவித்தனர்.
ஹஸன்குத்தூஸ் மொஹமத் ஹாமிஸ்
1990ம் ஆண்டு தமிழீழ வீடுதலைப் புலிகளினால் உடைமைகள் எல்லாவற்றையும் பரிக்கப்பட்டு பலவந்தமாக துப்பாக்கி முனையில் நாங்கள் வெளியேற்றப்பட்ட தமது சமூகம். தமது சமூகத்திற்கு யாழ், கிழிநொச்சி மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரோ மாகான சபை உறுப்பினரோ பெற்றுக்கொள்ள ஏழாத நிலை.
இதனை அடிப்படையாக வைத்து நடக்கக்கூடிய அடக்குமுறைகளுக்கு எதிராகவும் இனச்சுத்திகரிப்புக்கு எதிராகவுமான ஒரு போராட்டத்தை முன்னெடுத்து ஜனாதிபதி அவர்களை சந்திப்பதற்காக சென்றுக் கொண்டிருக்கிறோம்.
ஜனாதிபதியை சந்திப்பதற்கான நோக்கம் எமது பிரச்சினைகளை முன்வைத்து எமது யாழ், கிளிநொச்சி முஸ்லிம்களுக்கு ஒரு ஜனாதிபதி விசாரணைக்குழுவொன்றைப் பெற்றுக்கொள்வதே எமது நோக்கம்.
இந்த போராட்டம் வந்து தமிழ
மக்களுக்கோ சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல. நாங்கள் இதுவரைக்கும் யாழ்பாணத்திலயோ கிளிநொச்சியிலோ தமிழ்மக்களுடன் சினேக பூர்வமான வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
இந்த போராட்டம் வந்து இனவாதம் காட்டக்கூடிய ஒரு சில அரசியல்வாதிகளுக்காகவும் அரசியல்வாதிகளுக்கு உடந்தையாக இருக்கக்கூடிய அரச உத்தியோகத்தர்களுக்காகவும் இவர்களுக்கான போராட்டமே தான் இந்த போராட்டம்.
யாழ்ப்பாணம் கிளிநொச்சியை பொருத்தவரையில் மீள்குடியேற்றத்திற்காக நடக்கக்கூடிய அநீதிகள். எங்களது பூர்வீக நிலப்பரப்பு எங்களுக்கு சரியானமுறையில் விடுவிக்கப்படவில்லை. யாழ்ப்பாணத்தில் வெளிமாவட்டங்களில் உள்ளவர்களுக்கு புதிது புதிதாக காணிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ஆனால் பூர்வீகமாக கொண்ட யாழ்ப்பாண மக்களுக்கு இதுவரைக்கும் காணிகள் வழஙகப்படவில்லை.
யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளத்திற்கு வருகைத் தந்த 1000 குடும்பங்களுக்கு மேலானோர் என்னைப் பொருத்தமட்டில் இன்னும் வாடகை வீடுகளில் தான் குடி இருக்கிறார்கள். அவங்களுக்கான ஒரு தீர்வு இன்று வரைக்கும் கிடைக்கெப்பெறவில்லை எனவும் தெரிவித்தார்.