தமிழர்கள் இனி கோழி சாப்பிட முடியாதா?

 துறைநீலாவணை கிராமத்திற்கு செல்லும்வீதியில் கோழிக்கழிவுகள், வீட்டுக்கழிவுகள் உட்பட பல கழிவுகள் கொட்டப்படுவதை பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு,ஊடகவியலாளர்கள் இன்றையதினம் அவரிடம்தொலைபேசி மூலம் அழைத்து தெரியப்படுத்தினார்கள்.

இவ்விடயமாக அவர் மேலும் தெரிவிக்கையில்…

துறைநீலாவணை கிராமத்திற்கு செல்லும் வீதியில் நீண்ட காலமாக கோழிக்கழிவுகளையும்,வீட்டுக்கழிவுகளையும் வீசி வந்தாலும் களுதாவளை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் கல்முனை மாநகரசபை சபை முதல்வர் உட்பட உயரதிகாரிகள் ஒன்றிணைந்து தீர்க்கமான தீர்வுகள் எட்டப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது.

இருந்தாலும்  தற்போது இவ்வீதியில் மீண்டும் கோழிக்கழிவுகளை வீசி பொதுமக்களின் அசௌரியங்களை சிலர் ஏற்படுத்தி வருகின்றார்கள். இவ்விடயம் நிறுத்தப்பட வேண்டும். தவிர்க்கப்பட வேண்டும்.

இரண்டு சமூகத்தினரும் பயன்படுத்தும் துறைநீலாவணை வீதியில் கோழிக்கழிவுகளையும், விலங்கு கழிவுகளையும் வீசி வருவதால் சமாதானத்திற்கும், இன நல்லிணக்கத்திற்கும் குந்தகம் விளைவிக்ககூடிய நிலைமை உருவாகும். இதனை தவிர்த்து விட்டால் இரண்டு சமூகத்தினருக்குமிடையே  நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும்.

குறிப்பாக தமிழர் பிரதேசங்களில் தயவு செய்து கோழிக்கழிவுகளை கொட்டுவதை  தவிர்த்துவிடுங்கள். இறைச்சிக்கடை உரிமையாளர்கள் இவ்வாறு இறைச்சிக்கழிவுகளை கொட்டுவதால் தூர்நாற்ற வாடை வீசி பொதுமக்களை மிகுந்த வேதனைக்குட்படுவதாக விசனம் தெரிவிக்கின்றார்கள்.

இதேபோன்று இரண்டு சமூகத்தினரும் இணைந்து வாழும் எல்லைப்பகுதிகளிலும், தமிழர் பிரதேசங்களிலும் இவ்வாறான தீய செயல்கள் இடம்பெற்று வருகின்றது. அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை, சொறிக்கல்முனை, கிட்டங்கி வீதி,உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் தமிழர் பிரதேசங்களில் இவ்வாறு கொட்டுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான ஈனச்செயலை தவிர்த்து விடுங்கள். ஒரே குடும்பத்திற்குள்ளே சமாதானத்தை கட்டியெழுப்ப முடியல்ல என்றால் எப்படி பல்லின சமூகத்தில் சமாதானத்தையும், ஐக்கியத்தையும் கட்டியெழுப்ப முடியும்.

இவ்விடயமாக  கல்முனை மாநகரசபை முதல்வரும், களுதாவளை பிரதேச சபைத்தவிசாளரும் கூட்டாக இணைந்து பொது இடங்களிலோ அல்லது வயல்வெளி பிரதேசங்களிலோ, குளக்கரைகளிலோ, ஆள் நடமாட்டம் இல்லாத தமிழர் பிரதேசங்களில் இவ்வாறான தீய செயல்களை கொட்டுவதை தடுப்பதற்கு காத்திரமான நடவடிக்கை எடுக்குமாறு நான் உரிவர்களிடம் கேட்டுக் கொள்வேன் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *