புத்தளத்தில் முஸ்லிம் மாநாடு (படங்கள் இணைப்பு )

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 30வது பேராளர் மாநாடு புத்தளம் கே. ஏ. பாயிஸ் ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று காலை முதல் இடம்பெற்றது.

குறித்த பேராளர் மாநாடு நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவுப் ஹகீம், ஸ்ரீ.ல.மு.கா கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர். பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தவ்பீக், பைசல் காசிம் மற்றும் கலந்து கொண்டனர்.

குறித்த பேராளார் மாநாடில் நாட்டிலிருந்து பல நகரஙகளிலிருந்தும் நகரசபை மற்றும் பிரதேச சபைத் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் முன்னால் மாகான சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் நாட்டில் பல பாகங்களில் இருந்தும்  1000 கணக்கான ஸ்ரீ.ல.மு.கா கட்சியின் போராளிகள் கலந்து கொண்டனர்.

குறித்த பேராளர் மாநாட்டில் மீண்டும் கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹகீம் அவர்கள் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் கட்சியின் போராளிகளின் ஆதரவோடு ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

இதன்போது கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுக்கு பல்வேறான பதவிகளும் வழங்கப்பட்டமைக் குறிப்பிடத்தகது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *