கல்முனை தமிழர் கலாசார நிலைய வளாகத்தில், புதிய நிருவாகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம் முன்னெடுப்பு!
கல்முனை கலாசார நிலையத்தின் வளாகத்தில் புதிய நிருவாகத் தெரிவினை அடுத்து சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.
கடந்த வாரம் பொதுமக்கள் விளையாட்டு கழகங்கள் பொது அமைப்புகளின் பங்களிப்புடன் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த சனிக்கிழமை கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்ரும் கலாசார நிலையத்தின் ஆலோசகருமான கென்றி மகேந்திரன், ராஜரத்தினம், முன்னாள் மற்றும் சிவலிங்கம் ஆகியோரின் முயற்சியினால் கல்முனை மாநகர சபையின் இயந்திரங்களைக் கொண்டும் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நீண்ட காலமாக கல்முனை தமிழர் கலாச்சார நிலையத்தின் வளாகம் காடு மண்டிய நிலையில் காணப்பட்டது. புதிய நிருவாகத் தெரிவின் பின்னர் சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். கல்முனை பிராந்திய தமிழ் மக்களின் முக்கிய தேவையாக உள்ள கலாச்சார நிலையத்திற்கான நிரந்தர கட்டிடம் அமைப்பதற்குரிய ஏற்பாடுகளை புதிதாக தெரிவாகியுள்ள நிர்வாகத்தினர் அதிகாரிகள் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்பது எல்லோருரினதும் கோரிக்கையாகும்.
புதிய நிருவாக சபை விபரம்
தலைவர் திரு விநாயகம் பிள்ளை
செயலாளர் திரு சுப்ரமணியம்
பொருலாளர் இதயராஜா
உப தலைவர் கு. நடேசன்
உப செயலாளர் தா. பிரதீவன்
ஆலோசகர்கள்
திரு. ஏகாம்பரம்
திரு. ஹென்றி மகேந்திரன்
திரு. சர்வானந்தா
திரு. இராமகிருஸ்ணன்
திரு. இராஜரெட்ணம்