காட்டு யானை தாக்கி வனவிலங்கு அதிகாரி உயிரிழப்பு

உடவளை,நவ 07

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வனவிலங்கு அதிகாரி ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

உடவளையில் யானைகள் காப்பகத்தில் கடமையாற்றிய வனவிலங்கு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை வனவிலங்கு உத்தியோகத்தர் காட்டு யானைகளுக்கு உணவளிக்க சென்ற போதே தாக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த அதிகாரி எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த அதிகாரி பாணடுவ பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *