நாட்டு மக்களுக்கு நாளை கிடைக்கவுள்ள அரிய வாய்ப்பு

பூரண சந்திரகிரகணமொன்று நாளைய தினம் (8) நிகழவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் ஆய்வுப் பிரிவு பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த  சந்திரகிரகணத்தை ஆசியாவின் சில பகுதிகளிலும் அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் பார்வையிட முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் குறித்த  சந்திர கிரகணம் அரைவாசியாக தென்படக்கூடும் என்றும் இலங்கை நேரப்படி பி.ப 1.30 மணிமுதல் இந்த சந்திர கிரகணம் இடம்பெறுவதுடன்,  4.29 மணியளவில் முழுமையடைவதாகவும் இரவு 7.26 மணியுடன் அது நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் சந்திரனானது கிழக்கு திசையிலிருந்து மாலை 5.48 மணியளவில் மேலெழும்புவதோடு இலங்கையர்களுக்கு இதன் இறுதிப் பகுதியை மாத்திரம் பகுதியளவு கிரகணமாக பார்வையிட முடியும்.

குறித்த  சந்திர கிரகணமானது இந்த வருடத்தின் இரண்டாவதும் இறுதியானதுமான சந்திரகிரகணமாக அமையவுள்ள நிலையில் மீண்டும் முழுமையாக சந்திரகிரணமொன்று 2025ஆம் ஆண்டு  மார்ச் 14 ஆம் திகதியே உலகில் நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *