மூதூர் – பாட்டாளிபுரம் கிராமத்தில் உள்ள காளி கோயில் வளாகத்தில் கலாச்சார பண்பாட்டு விழா இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
இதன், போது தமிழர்களின் பாரம்பரியங்களை பிரதிபலிக்கும் கம்பு வீச்சு, கரகாட்டம் வில்லுப்பாட்டு,கவிஞர் பரம்சோதி கவியரங்கு உள்ளிட்ட கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றதோடு மாணவர்களுக்கிடையிலான விவாத அரங்கும் இடம்பெற்றது.
இந், நிகழ்வை இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் நெறிப்படுத்தியிருந்தது.
இந்நிகழ்வில் கலைஞர்கள் ,ஊடகவியலாளர் கௌரவிப்பும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் சரண்யா சுதர்ஸன் கலந்து சிறப்பித்தார்.
அத்தோடு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர், மூதூர் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் ,இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் பொன்.சற்சிவானந்தம் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 





