தனுஷ்கவின் வழக்கு தொடர்பில் சட்டத்தரணியின் அறிவிப்பு

கொழும்பு,நவ 07

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அவுஸ்திரேலியா உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் சட்டத் தலைவர் கலாநிதி சானக சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் இன்றி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வழக்கில் வெற்றிபெற முடியும் என்பதால் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் சட்டத் தலைவர் கலாநிதி சானக சேனாநாயக்க மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *