
வட்டுக்கோட்டை பொன் னாலை பிரதான வீதியின் தற்காலிக புனரமைப்புப் பணிகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – பொன்னாலை பருத்தித்துறை வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் முதல் வட்டுக்கோட்டை சந்தி வரையான வீதி காப்பெற் இடப்பட்டு நிறைவடைந்தது.
பின்னர் வட்டுக்கோட்டை சந்தி முதல் பொன்னாலை வரையான வீதிப்புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக திட்டம் இடைநிறுத்தப்பட்டது.
காரைநகர்- மானிப்பாய் வீதியும் மிகவும் மோசமாக சேத மடைந்து காணப்படுவதால், காரைநகரிலிருந்து பயணம் மேற்கொள்வோர் இந்த வீதியையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். குறித்த வீதியும் மிக மோசமாகச் சேதமடைந்துள்ள நிலையில் புரைமைப்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், மக்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியிலேயே மேற்படி வீதியைப் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் 784 வழித்தட வட்டுக்கோட்டை – பொன்னாலை வீதியின் நிலைமை குறித்து கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் ஊடாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குண வர்த்தனவின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் வீரக் கோனிடம் காரைநகர் பிரதேச சபைத் தவிசாளரால் நேரடியாகக் கடிதம் கையளிக்கப்பட்டது.
இதையடுத்தே 5.5 மில்லியன் ரூபா செலவில் தற்போது தற்காலிகமாக வீதி செப்பனிடும் பணிகள் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.