
கிளிநொச்சி- அக்கராயன்குளம் வான்பாய்கின்றபோது அக்கராயன் குளத்தில் இரு மருங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள நெற் செய்கை அழிவடையும் ஆபத்து உள்ளது என்று விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த மூன்றாண்டுகளாக அக்கராயன் குளத்தின் இருபுறங்களிலும் காணிகள் வழங்கப்பட்டு பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குளத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற ஒழுங்குகள் மற்றும் அறிவுறுத்தல்கள் கொடுக்கப்படாமையால் குளத்தின் இருபுறமும் பொருத்தமற்ற வகையில் பயிர்ச்செய் கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அக்கராயன் குளத்தின் நீர் பரவாமல் அமைக்கப்பட்டருந்த அணைக்கட்டு தற்போது அழிவடைந்துள்ளது. இதனால் அக்கராயன்குளம் வான் பாய்கின்றபோது பெருமளவு நீ வயல் நிலங்களில் ஊடுருவி பயிழிவுகள் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.