பாடசாலை ஆசிரியர்களின் உடையில் மாற்றமில்லை – கல்வி அமைச்சு

ஆசிரியர்களின் உடையை மாற்றுவதற்கு தாம் தீர்மானம் எடுக்கப்போவதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆசிரியர்களின் உடை தொடர்பான விவாதம் இடம்பெற்றது.

இதன்போது, ஆசிரியர்களின் ஆடையை எந்த வகையிலும் மாற்றுவதற்கு தாம் தீர்மானம் எடுக்கப்போவதில்லை என கல்வி அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

அதற்கான எந்த நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சு மேற்கொள்ளாது எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

சாரியைத் தவிர வேறு வசதியான ஆடைகளை ஆசிரியர்கள் அணிய அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால் இதற்கு மகாசங்கத்தினர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *