
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. தோட்டக் கம்பனிகள் அடாவடியில் ஈடுபடுகின்றன. தொழில் பிரச்சினைகள் பொலிஸ் நிலையம்வரை செல்கின்றது. இந்நிலைமை நீடித்தால் நாங்களும் ஜெனிவா செல்ல வேண்டிவரும். -இவ்வாறு பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
பதுளை, ஹாலிஎல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அரசியல் நியமனம் பெற்றவர். அவர் தோட்டத் தொழிலாளி ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொழில் அமைச்சு, தொழில் திணைக்களம் என்பன இருக்கின்றன. எதற்கு பொலிஸார் தலையிட வேண்டும்? தோட்டக் கம்பனிகள் இன்று தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றன. தேவையற்ற பிரச்சினையை தோற்றுவிக்க முயற்சிக்கின்றன.
எனவே, மலையக மக்களுக்கு அநீதி தொடர்ந்தால் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையையும், இந்தியாவையும் நாட வேண்டிவரும். – என்றார்.