முல்லை பாடசாலை மாணவர்களுக்கான மாவட்ட மட்ட மல்யுத்த போட்டி!

முல்லைத்தீவு மாவட்ட பூப்பந்தாட்ட உள்ளக அரங்கில் மாவட்ட விளையாட்டுப்பிரிவின் ஒழுங்குபடுத்தலுடன் மல்யுத்த துறையினை உக்குவித்தல் இளையோர் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்காகக் கொண்டு ஆண்/ பெண், இளைய வயது/பாடசாலை மாணவருக்கான போட்டிகள் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் நேற்று (7)  நடைபெற்றன. 

இதில் பெருமளவானவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் பங்குகொண்ட பாடசாலையாக/ பாடசாலை மாணவர்களாக

வித்தியானந்தா கல்லூரி,  

கலைமகள் வித்தியாலயம், 

தண்ணீரூற்று இந்து தமிழ்கலவன் வித்தியாலயம், குமுழமுனை மகாவித்தியாலயம், கற்சிலைமடு பண்டாரவன்னியன் மகாவித்தியாலயம்,  கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயம், முல்லைத்தீவு மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்களின் பங்குகொண்டனர். 

இவ் நிகழ்வில் இளையவர்கள் கலந்து கொண்ட பாடசாலைகளின் பதக்கங்கள் அடிப்படையில்

ஆண்கள் பிரிவில் 1 ம் இடம் வித்தியானந்தா கல்லூரி ,

2ம் இடம் முல்லைத்தீவு மகாவித்தியாலயம்,

3ம் இடம் கலைமகள் வித்தியாலயம்

பெண்கள் பிரிவில் 1ம் இடம் வித்தியானந்தா கல்லூரி,

2ம் இடம் கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயம்,

3ம் இடம் கலைமகள் வித்தியாலயம் ஆகியன பெற்றிருந்தன. 

இந் நிகழ்வை பயிற்றுவித்த வரலாற்றுதுறை ஆசிரியரும் மாவட்ட மல்யுத்த பயிற்றினரான பு. தர்சன் மாணவர்களை பயிற்சியளித்து போட்டிக்கு நடுநிலைமை வகித்தனர்.

இந் நிகழ்விற்கு முன்னாள் விளையாட்டு வீரரும் விளையாட்டு ஆர்வலருமான சுகாதார வைத்திய அதிகாரி(MOH) மருத்துவர் சுதர்சன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

விருந்தினராக மாவட்ட செயலக நிர்வாக அலுவலர்(AO) திருமதி S.விக்கினேஸ்வரன் வலயகல்வி உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர்(ISA) டிலான்,  மாவட்ட விளையாட்டு அதிகாரி(DSO) ந.முகுந்தன், புதுக்குயிருப்பு விளையாட்டு அலுவலர்(SI) வரதன் குத்துச்சண்டை சங்க தலைவர் லெறிஸ்லால் பயிற்சி ஆசிரியர் தேதிந்தன் ஆகியோர் மேற்படி நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *