திலினி பிரியமாலி விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதியமைச்சர் ஜீவன் குமாரதுங்க அவரது மனைவி, நடிகை சங்கீதா வீரரட்ண ஆகியோரை சிஐடியினர் விசாரணை செய்துள்ளனர்.
ஜீவன்குமாரதுங்கவையும் அவரது மனைவியையும் சனிக்கிழமை சிஐடிக்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்தியதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது சங்கீத வீரரட்ணவிடமிருந்து திங்கட்கிழமை வாக்குமூலத்தை பெற்றுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிஐடியினர் ஐந்து மணித்தியாலங்களிற்கு மேல் அவர்களிடமிருந்து வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.
அவர்களுடைய வர்த்தக நடவடிக்கைகள் ஜீவன்குமாரதுங்க இயக்கிய படத்திற்கு ( ஜீவா) பிரியமாலி பணம் வழங்கியமை உட்பட பல விடயங்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுத்ததாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மோசடி மூலம் பெற்ற பணத்தை சினிமாவில் திலினி செலவிட்டாரா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.