75வது சுதந்திர தினத்தில் நாடு முழுவதும் உள்ள மாவீரர் சிலைகளுக்கு அஞ்சலி!

எதிர்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மாவீரர்களின் சிலைகளுக்கும் மரியாதை செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன, பணிப்புரை விடுத்துள்ளார்.

சுதந்திர தினத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ள மாவீரர்களின் சிலைகளுக்கு அஞ்சலி செலுத்துமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவிக்குமாறு அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் செயலாளருக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

75 ஆவது சுதந்திர தினத்துடன் இணைந்து இலங்கையின் தேசிய மாவீரர்களின் தகவல் பதிவேட்டை தயாரிக்கவும், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகளை தொடர்பு கொண்டு இந்த பணிகளை மேற்கொள்ளுமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *