தவறானவர்களின் கைகளுக்குள் நாடு:டைட்டானிக் கப்பலின் நிலையே இலங்கைக்கும்-மொட்டுக் கட்சி எம்.பி கவலை!

நாம் அனைவரும் இணைந்து உருவாக்கிய டைட்டானிக் கப்பல் தவறான கேப்டனின் கைகளில் சிக்கியதாகவும், கேப்டன் அதீத நம்பிக்கையில் சென்று கப்பலை பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட உறுப்பினர் வீரசுமண வீரசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

டைட்டானிக் கப்பலில் ஜேக்கும் ரோஸுக்குமிடையிலான காதல் உறவைப் போன்று பொஹொட்டுவாவுக்கும் ஐ.தே.க.வுக்கும் இடையிலான காதல் உறவின் பலனாக பொஹொட்டுவ அழிந்து “ரோஸ்” மட்டும் உயிர் பிழைத்துள்ளதாகவும் தற்போது ரோஸ் என்ற காதல் கதாபாத்திரம் எகிப்துக்கு சென்றுள்ளதாகவும் வீரசுமண வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். .

டைட்டானிக் கப்பலுக்கு நேர்ந்ததைப் போன்றே அரசாங்கத்தின் அழிவு, பொருளாதாரம், இலங்கைத் தாயின் அழிவு என வீரசிங்க தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தனுஷ்க சம்பவம் முதல் சம்பவம் அல்ல என வீரசுமண வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *