கொழும்பு, நவ 08
நாளைய தினம் இரண்டு மணித்தியாலங்களுக்கு மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதற்கான அனுமதியை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V மற்றும் W வரையிலான பகுதிகளில் முற்பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும், இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.