பின்னவல சரணாலயத்தில் யானை ஒன்று செய்த கொடூரச் செயல் – இருவர் உயிரிழப்பு

பின்னவல யானைகள் சரணாலயத்தில் உள்ள  கெமுனு கந்துல என்ற யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இன்று (08) காலை யானை பராமரிப்பாளர்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 
கடுவெல – நவகமுவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த ஏத்கோவ்வா கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
 
இதேவேளை, நேற்று (07) உடவலவை யானைகள் சரணாலயத்தில் 22 வயதுடைய தொழிலாளி ஒருவர் காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *