எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுயநலமாக செயற்படுவதாகவும், சரியான தீர்மானங்களை தீர்க்கமான தருணங்களில் எடுக்க முடியாமல் திணருவதாகவும் மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுனரும், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி குற்றம்சுமத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் வேண்டும் என்றே குழப்பியடிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.