புதன்கிழமை முதல் வழமைக்கு திரும்பும் கடவுச்சீட்டு விநியோகம்!

கொழும்பு,நவ 08

கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை புதன்கிழமை (09) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திலும் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிராந்திய காரியாலயங்களிலும் கடவுச்சீட்டு விநியோகம் வழமைக்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணனி முறைமைக் கோளாறு தற்போது சீரமைக்கப்பட்டுளு்ளதன் காரணமாக கடவுச்சீட்டு விநியோகம் புதன்கிழமை (09) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *