காலநிலை தொடர்பான கொப் 27 மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த மாலைதீவு நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் நஷீத்தை அனுப்பியமை குறித்து எதிர்க்கட்சி இன்று அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த இலங்கையர்களை ஏன் அனுப்ப முடியாது என்று கேள்வி எழுப்பியது.
நஷீட் எந்த அடிப்படையில் இலங்கையின் பிரதிநிதியாக அனுப்பப்பட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வினவினார்.
இந்த உச்சிமாநாட்டிற்காக நஷீத் வெள்ளிக்கிழமை காலை மாலத்தீவில் இருந்து புறப்பட்டார்.
இந்தநிலையில் அவரது பயணம் குறித்து மாலைதீவு நாடாளுமன்றம் அன்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது,
அவர் இலங்கையின் பிரதிநிதியாக அவர் கொப் 27 மாநாட்டில் பங்கேற்பார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதேவேளை காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் குழுவின் மூலம், நஷீத்தின் பயணத்திற்கான அனைத்து செலவுகளும் ஈடு செய்யப்படுவதாக மாலைத்தீவு நாடாளுமன்றத்தின் தகவல் தொடர்பு இயக்குநர் ஹசன் ஜியாவ் கூறியுள்ளார்.