அனுராதபுரம்,நவ 08
அனுராதபுரம்-கஹடகஸ்திகிலிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து இன்று (08) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
கெக்கிரவ நேகமவை பிறப்பிடமாகவும் கஹடகஸ்திகிலிய கிரிப்பாவயை வசிப்பிடமாகவும் இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகத்தின் கலைபீடத்தின் மூன்றாம் வருட மாணவியான நஹாதீயா (25 வயது) எனவும் தெரியவருகின்றது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் மனைவி ஆகியோர் பயணித்த போது மனைவி உயிரிழந்த நிலையில் கணவர் அனுராதபுர போதனை வைத்தியசாலைக்கு படுகாயம் அடைந்த நிலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையில் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்பொழுது கஹடகஸ்திகிலிய பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை கஹடகஸ்திலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.