வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 32 வருடகளாகியுள்ள நிலையில் கிளிநொச்சி நாச்சிக்குடா முஸ்லிம் அமைப்பின் ஏற்பாட்டில் ‘ எமது உரிமை மீட்புப் போராட்டம்’ எனும் தொனிப்பொருளில் நடைபவணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தப் பயணத்தில் முதியவர் உட்பட இருவர் ” எமது உரிமை மீட்புப் போராட்டம் ” எனும் பதாதையை ஏந்தியவாறு நடைபவணியாக பயணம் செய்கின்றனர்.
இந்த நடை பவணி கடந்த மாதம் 26 ஆம் திகதி கிளிநொச்சி நாச்சிக்குடாவில் இருந்து ஆரம்பமாகி நேற்று புத்தளத்தை வந்தடைந்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 9.00 மணியளவில் புத்தளம் மதுரங்குளியில் இருந்து கொழும்புக்கான நடை பவணியை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
32 வருடங்களாகியும் தமக்கான மீள்குடியேற்றம் துரிதகதியில் இடம்பெறவில்லை எனவும் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களுக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கையை முன்வைத்து இந்த நடைப்பவணி கொழும்பு வரை சென்று ஜனாதிபதியைச் சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளிக்கவுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.