களைக்கொல்லி நாசினிகளைக் கடத்தி செல்ல முற்பட்ட கெப் வண்டி கைது!

இந்திவாலிருந்து கடல்மார்க்கமாக சட்டவிரோதமாக களைக்கொள்ளி நாசினிகளைக் கடத்தி கெப் வாகனத்தில் கொண்டு செல்ல முற்பட்டபோது இன்று காலை இலந்தையடி பகுதியில் உல்வீதியில் வைத்து பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

இவ்வாறு சட்டவிரோதமாக களைக்கொல்லி நாசினிகளை கடத்திச் செல்வதாக பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த கெப்வண்டியைப் பொலிஸார் பின்தொடர்ந்துள்ளனர்.

இதன்போது கெப்வண்டியை நிறுத்திவிட்டு கெப்வண்டியின் சாரதி மற்றும் சாரதியின் உதவியாலாளர் இருவரும் தப்பியோட முயற்சித்தபோது சாரதியின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது கடத்தலுக்கு பயன்படுத்திய கெப்வண்டி கைப்பற்றப்பட்டுள்ளதுடன் களைக்கொல்லி நாசினிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

39 உரைகளில் 117 பெட்டிகளடங்கிய 1170 களைக்கொல்லி நாசினி பக்கற்றுக்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட களைக்கொல்லி நாசினி 87 இலட்சம் ரூபா பெருமதியென மதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாலாவி மல்லிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் தப்பியோடிய சாரதி தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நுரைச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *