செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 32 வது ஆண்டு விழாவும், விளையாட்டுப் போட்டியும் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானம் மற்றும்,செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் பிரதான மண்டபம் ஆகிய இடங்களில் இடம்பெற்றது.
செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் தலைவர் கு.திருக்குமரன் தலைமையில் குறித்த போட்டி இடம்பெற்றது.
விளையாட்டு நிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில் வழங்கப்பட்டதோடு, நிறுவனத்தின் நிர்வாக தெரிவுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.