நேபாளத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள்; 3 பேர் உயிரிழப்பு

காத்மண்டு,நவ 09

நேபாள நாட்டின் மேற்கே டோடி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன.

இதில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுபற்றி அந்நாட்டின் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், நேபாள நாட்டின் மேற்கே நேற்றிரவு 9.07 மணியளவில் ரிக்டரில் 5.7 அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதே பகுதியில் இரவு 9.56 மணியளவில் ரிக்டரில் 4.1 அளவிலான மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதன்பின்னர் இன்று அதிகாலை 2.12 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.6 ஆக பதிவானது. இதில் வீடு இடிந்து 3 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் கைராகாவன் பகுதியில் ஏற்பட்டு உள்ளது. இதனை பூர்பிசவுக்கி கிராம கவுன்சில் தலைவர் ராம் பிரசாத் உபாத்யாய் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த நிலநடுக்கங்கள் இந்தியாவின் புதுடெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பிற பகுதிகளிலும் உணரப்பட்டன. நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் நேற்று காலை 4.37 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி இருந்தது. நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து வடகிழக்கே 155 கி.மீ. தொலைவில் நேற்று காலை 4.37 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. கடந்த அக்டோபர் 19-ந்தேதி நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் ரிக்டரில் 5.1 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதேபோன்று ஜூலை 31-ந்தேதி காத்மண்டுவில் இருந்து தென்கிழக்கே 147 கி.மீ. தொலைவில் ரிக்டரில் 6.0 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. கடந்த ஏப்ரல் 25-ந்தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் காத்மண்டு மற்றும் பொகாரா நகரங்களுக்கு இடையே கடுமையான தாக்கம் ஏற்பட்டது. அதில், அந்நாட்டு மக்களில் 8 ஆயிரத்து 964 பேர் உயிரிழந்தனர். 22 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில், நேபாளத்தில் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கங்களில் சிக்கி 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *