09 மாகாணங்களுக்கும் விரைவில் புதிய ஆளுநர்கள்?

புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய தரப்பினருடன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட 09 மாகாணங்களுக்குமான ஆளுநர்களை நீக்கிப் புதிய ஆளுநர்களை நியமிக்க ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாகாணசபைகள் ஆளுநரின் ஒப்புதல்களுடனேயே இயங்கி வருகின்ற நிலையில், தேர்தலை அடிப்படையாக கொண்டு புதிய ஆளுநர்களை நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் விரைவில் தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளதாகவும், அதற்கான முன்னேற்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழு முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *