பிரித்தானிய தூதுவரை சந்தித்த ரிஷாட் எம்.பி.!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பான நேற்று கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை, விவசாயம், மீன்பிடித் துறைக்கான முதலீடுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இக்கட்டான சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு பிரித்தானியா உதவிகளை வழங்கியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *